தூத்துக்குடி, மே 27- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பேய்குளத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). ஆட்டோ ஓட்டுநரான இவர் பெட்டிக்கடையும் நடத்தி வந்தார். மேலும் ஸ்ரீவெங்கடேசபுரம் பஞ்சாயத்து 6-வது வார்டு உறுப்பினராக வும் இருந்தார். இந்நிலையில் ஜெயக்குமார் கடந்த மே 18 அன்று இரவு தெற்கு பேய்குளம் மெயின் பஜாரில் ஒரு கும்பலால் அரிவா ளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏற்கனவே 10 பேரை கைது செய்தனர். இந்நிலையில் போலீசார், செங்குளத்தை சேர்ந்த லிங்கம்(41) என்பவரை செவ்வாயன்று கைது செய்தனர். மேலும் பேய்குளத்தை சேர்ந்த பழனி(53) கைது செய்யப்பட்டார். இதுதவிர மேலபனைக்கு ளத்தை சேர்ந்த ராஜமிக்கேல்(32), கீழபனைக்குளத்தை சேர்ந்த செந்தில்ஜோசப்(29), மீரான்குளத்தை சேர்ந்த பண்டார ராஜ் (25) ஆகியோர் திருவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத் தில் நீதிபதி தமிழரசு முன்னிலையில் சரண் அடைந்தனர்.