tamilnadu

img

கார்ப்பரேட்களுக்கு மேலும் வரி குறைப்பு

கார்ப்பரேட்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். 
கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 37வது கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பே செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நிறுவன வரி விகித சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ம
வருமான வரிச் சட்டத்தில் 2019-20 நிதி ஆண்டு முதலே புதிய வரி விகிதம் சேர்க்கப்படுகிறது என்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதத்தை 34.94 விழுக்காட்டில் இருந்து 25. 17 விழுக்காடாக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனம் மீதான வரி 22 சதவீதமாக குறைக்கப்படும் எனக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன்,  வரி விலக்கு அல்லது சலுகைகள் பெறும் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என தெரிவித்தார். அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு தொழில் உற்பத்தி துறையில் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும் என்றும் வரி விகித குறைப்பு மூலம் அரசுக்கு 1. 45  லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஏற்கனவே இந்தியா பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவிக்கும் சூழலில் மோடி அரசு  தற்போது மேலும் கார்ப்பரேட்களுக்கான வரியை குறைத்துள்ளது . இது  இந்திய பொருளாதாரத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 

;