tamilnadu

img

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு மோடி துரோகம்.... பஞ்சாப் பாஜக எம்எல்ஏ கடும் குற்றச்சாட்டு

சண்டிகர்:
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில், எதிர்க்கட்சிகள்தான் பிரதமர் மோடியை விமர்சித்து வந்தன. தற்போது, பாஜகஎம்எல்ஏ ஒருவரே இவ்விஷயத்தில் மோடியை விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பசல்கா தொகுதியைச் சேர்ந்த சுர்ஜித்குமார் ஜெயனி என்ற அந்தஎம்எல்ஏ, “புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்து விட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“மத்தியில் இருக்கும் நரேந்திர மோடி அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்கு செவிசாய்க் காமல் அவர்களை உதாசீனப்படுத்தி இருக்கிறது. எனக்குத் தெரிய கடந்த 35 ஆண்டுகளில் இதுபோன்று நடந்தது இல்லை. இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் இதுபோன்றதுரோகத்தைச் செய்தது இல்லை.விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மோடி அரசுக்கு மனமிருந்தால் அதனை 5 நிமிடத்தில் செய்திருக்க முடியும். ஆனால், அதனைச் செய்யவில்லை. குறைந்த பட்ச ஆதார விலை முறையாக நிர்ணயம் செய்யப்படவில்லை. நெல்லுக் குப் பதிலாக மாற்றுப் பயிர் செய்வதற்கான திட்டத்தையோ ஆலோசனையையோ கூடஅவர்களுக்கு வழங்கவில்லை.இன்று விவசாயிகள் மோடியின் உருவபொம்மையை கொளுத்திப் போராட்டம் நடத்திவருகின்றனர். பாஜக மேலிட நிர்வாகிகளான அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் விவசாயிகள் படும் வேதனையையும் அவர்களின் போராட்டத் தையும் களத்தில் வந்து பார்த் தால்தான் உண்மை நிலை புரியும். இதைக் கூறுவதால், பாஜகஎன்மீது நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்”இவ்வாறு பாஜக எம்எல்ஏ சுர்ஜித் குமார் ஜெயனி கூறியுள்ளார்.