tamilnadu

img

வேலை இழந்து வாடும் தொழிலாளர்களுக்கு சிபிஎம் சார்பில் உணவு வழங்கல்

திருவில்லிபுத்தூர்: 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவில்லிபுத்தூர் ஒன்றியம் சார்பில் திருவேங்கடபுரம், ராமலிங்கபுரம், புதுச்செந்நெல்குளம், ராஜகோபாலபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மதிய உணவு மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளருமான கே.சாமுவேல்ராஜ் கலந்துகொண்டு உணவு பொட்டலங்களை வழங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் ,மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி, அச்சம் தவிர்த்தான் ஊராட்சி திருவேங்கடபுரம் கிளைச் செயலாளர் கனகராஜ் ,பால் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

;