tamilnadu

உ.வே.சா பிறந்தநாளை சங்கத்தமிழ் நூல்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க கோரிக்கை

குடவாசல், மார்ச் 4- திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் 166-வது  பிறந்த தினத்தையெட்டி தமிழ்நாடு முற்போ க்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பாக 3-வது ஆண்டு விழா, கலை இரவு - இசை விழா  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமுஎகச வலங்கைமான் வட்டார கிளைத் தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். வட்டாரப் பொருளாளர் சின்னத்துரை வரவேற்றார். மாவட்டத் தலை வர் தாமோதரன் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். தமுஎகச மாநில துணைத் தலைவர் நந்தலாலா, மாநில துணைச் செயலாளர் களப்பிரான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக விருப்பாச்சிபுரம் சிமிலிமேடு பள்ளிவாசலில் இருந்து பேரணி துவங்கியது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் வாயிலாக தமு எகச சார்பில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநா தர் பிறந்த நாளான பிப்ரவரி 19-ஐ சங்கத்த மிழ் நூல்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க  வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டு கோள் வைக்கப்பட்டது. கிளைப் பொருளாளர்  வே.சின்னத்துரை நன்றி கூறினார்.