tamilnadu

யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்கிடக் கோரிக்கை

திருவாரூர், நவ.9- திருவாரூர் மாவட்டத்தில் விளைச்ச லுக்கு தயாராக இருக்கும் சம்பா சாகுபடி பயிருக்கு யூரியா உரம் கிடைக்காமல் விவ சாயிகள் சிரமத்தில் உள்ளனர். இந்த தட்டுப்பாட்டை போக்கிட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் எஸ்.தம்புசாமி தலை மையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் வி.சுப்ரமணியன் பங்கேற்றார். மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்ட பொருளாளர் எஸ்.சாமிநாதன், மாவட்ட நிர்வாகிகள் எம்.சேகர், ஜி.பவுன்ராஜ், கே.சுப்ரமணியன், தியாகு.ரஜினிகாந்த், கே.தமிழ்ச்செல்வி, என்.எம்.சண்முகசுந்தரம், எம்.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் டெல்டா மாவட்டத்தில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தற்போ தைய நிலையில் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் பெரும் கவ லையில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வா கம் அவசர உணர்வோடு விவசாயிகளின் தேவையைக் கருதி தழைச்சத்தை உள்ளடக்கிய யூரியா உரத்தினை உடனடி யாக வழங்க வேண்டும். தற்போது தண்ணீர் தேவைப்படும் அவசர மற்றும் அவசிய நிலையில் பயிர் உள்ளது. எனவே தற்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு அரசு அணைகளில் இருந்து  தண்ணீரை திறந்து விட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.