குடவாசல், அக்.15- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் அகரத் திரு மாளம் பூந்தோட்டம் பகுதியில் 7 வருடங்களாக தூர்வாரப்படா மல் இருந்த குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கூட்டாக பல்வேறு போரா ட்டங்களை நடத்தியும், கடந்த மாதம் 26-9-2019 அன்று மாவட்ட ஆட்சியரிடம், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சலாவுதீன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் தற்போது குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளைஞர்களை பாராட்டினர்.