மன்னார்குடி, செப்.17- நேஷனல் ஓய்வூதியர் திட்டத்தின்கீழ் இந்தியன் வங்கி யின் 50 மண்டல அலுவலகங்களில் ஒன்றான திருவாரூரில் 82 ஓய்வூதிய பயனாளிகளை சேர்த்து மண்ட அளவில் 4 வது இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது. இதற்காக இந்தியன் வங்கியும் , புது டெல்லியில் உள்ள ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் திருவாரூர் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் மற்றும் பொதுமேலாளரு மான என்.ராஜாமணி, மண்டல துணை மேலாளர் மற்றும் துணை பொதுமேலாளருமான எம்.செல்வநாயகம் ஆகி யோர் கலந்துகொண்டார். ஏற்கனவே இந்தியன் வங்கி திருவாரூர் மண்ட லத்திற்குட்பட்ட கிளை மேலாளர்கள் மற்றும் வங்கியின் தொடர்பாளர்கள் அனைவருக்கும் நேஷனல் ஓய்வூதிய திட்டத்திற்கு பயனாளிகளை சேர்க்க பயிற்சி அளித்துள் ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் திருவாரூர் மண்டல அலுவலகம் பிரிக்கப்பட்டு குறுகிய காலத்தில் நேஷனல் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பயனாளிகளை சேர்த்து சாதனை படைத்துள்ளதற்கு பொதுமக்களும், வாடிக்கையாளர் களும் வாழ்த்து தெரிவித்தனர்.