பள்ளி சீருடை வழங்காததால் கிழிந்த ஆடையுடன் செல்லும் மாணவர்கள்
குடவாசல், ஜூலை 16- பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் நெருங்க உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றி யத்தில் சீருடை வழங்கப்படாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். வலங்கைமான் ஒன்றியத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் சீருடை கிடைக்காததால் பழைய கிழிந்த சீரு டைகளை அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த ஒன்றியம் வலங்கை மான். அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், பள்ளி திறந்த முதல் நாளில் அனைத்து இலவச பொருட்களும் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்னும் பல பள்ளிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடை கிடைக்காமல் பழைய சீருடையையே அணிய வேண்டிய நிலை உள்ளது. எனவே அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அரசின் கூட்டுறவு தையல் மையங்கள் விரைவாக சீருடைகளை தைத்து வழங்காததால் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்க முடியவில்லை. வெகு சீக்கிரத்தில் கொடுக்கப்படும் என்றார்.
2000 மரக்கன்று நடும் நிகழ்ச்சி தொடக்கம்
தஞ்சாவூர், ஜூலை 16- முஸ்லீம்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் மரக்கன்று கள் நடும் திட்டம் ஆவணத்தில் தொடங்கியது. கஜா புயலில் பெரிதும் பாதித்த, தஞ்சாவூர் மாவட்டம் ஆவணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை டிஎன்டிஜே ஆவணம் கிளை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சிவக்குமார் மரக்கன்று நட்டு துவங்கி வைத்தார். இதில் பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் மரக்கன்று களை நட்டனர். ஒவ்வொரு மாணவர் குழுவும் ஒரு மரக் கன்றை தண்ணீர் ஊற்றி தினசரி பராமரிப்பது என்று அறி வுறுத்தப்பட்டது. ஆவணம் கிளை நிர்வாகிகள் அப்துல்லாஹ், புரோஸ் மற்றும் ஃபாருக் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆவணம் கிளை சார்பில் ஆவ ணம், பெரியநாயகிபுரம் பகுதிகளில் 500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளனர்.