வாகன விபத்து வழக்கிற்கான லோக் அதாலத்
மன்னார்குடி டிச.14- கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக வழக்கு களுக்கு 14 ஆம் தேதி நடைபெறும் லோக் அதாலத்தில் சமரச தீர்வு பெறலாம். தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளை மற்றும் அனைத்து கோர்ட்டுக ளிலும் நிலுவையிலுள்ள வழக்கு களுக்கு வரும் 14ஆம் தேதி சமர சத் தீர்வு காண தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது. இதில் அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட தொடர்பான மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரசத் தீர்வு கண்டு சம்பந்தப்பட்டவர்கள் பயனடையலாம். எனவே இது தொடர்பான கீழ்காணும் மண்டல போக்கு வரத்துக் கழக அலுவலர்களின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். கும்பகோ ணம் மண்டலம்: 0435-2403724, 90432 38312, 86675 90214, திருச்சி மண்டலம்: 0431-2415551- 54,94878 98057, 98945 91570. காரைக்குடி மண்டலம்: 04565-234125-26,94878 98095,94878 98103 புதுக்கோட்டை மண்டலம்: 04322-266111, 94878 98065,88706 11267. இத்தகவலை கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மேலா ண்மை இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
காசநோய் கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம்
திருச்சிராப்பள்ளி, டிச.14- திருச்சி மாநகராட்சி பகுதி யில் வருகிற 16-ந் தேதி அன்று காசநோய் கண்டறியும் வாகனம் கல்நாயக்கன் தெரு, வண்ணாரப்பேட்டை, தாரா நல்லூர் இ.பி.ரோடு, தேவதா னம், காஜாநகர், இந்திராநகர் ஆகிய இடங்களுக்கும், 17-ந் தேதி மணப்பாறை, சொக்கலிங்கபுரம், சுண்டாக் காம்பட்டி, வையம்பட்டி அனையாப்பூர், மருங்கா புரி, கருமலை ஆகிய இடங்க ளுக்கும். 18-ந் தேதி மண்ணச்ச நல்லூர், சமயபுரம், சோலை முல்லை நகர், காந்தி நகர், ஓமாந்தூர், துறையூர், பச்சைமலை, நீலியம்பட்டி, உப்பிலியபுரம், சோபனா புரம் ஆகிய கிராமங்களுக்கு காசநோய் கண்டறியும் வாகனம் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு வரவுள்ளது. இவ்வாகனத்தில் அந்தந்த பகுதி முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஒருவர் மற்றும் முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் ஒருவரும் உடன் செல்வார் கள். இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரி வித்துள்ளார்.