தையல் சம்மேளன மாநிலக்குழு சிறப்புக் கூட்டம், திருவாரூரில் நடைபெற்றது. சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலக்குழு முடிவுகளையும், 2020 ஜனவரி 23- 27 வரையில் நடைபெறும் சிஐடியு அகில இந்திய மாநாடு குறித்தும் விரிவாக பேசினார். மாநில பொதுச்செயலாளர் எம்.ஐடாஹெலன், தலைவர் பி.சுந்தரம், பொருளாளர் இரா.மாலதி, சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.