குடவாசல், மார்ச் 2- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி குடவாசல் தெற்கு பகுதி சார்பாக மணப்பறவை ஊராட்சி கிராமத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு எழுது பொருட்கள் வழங்கப் பட்டன. அதே போல் குட வாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலைய பகுதியிலும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செய லாளர் ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பா. பிரபாகரன், மணப்பறவை ஊராட்சி தலைவர் சுப்பிர மணியன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆதித்யா பாலு, நகர இலக் கிய அணி அமைப்பாளர் கே.கே.பி.செந்தில், விதொ அணி அமைப்பாளர் எஸ்.முத்துபிள்ளை, ஏ.கே.சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.