tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு எழுதுப் பொருட்கள் வழங்கல்

 தஞ்சாவூர், செப்.19- தஞ்சாவூர் மாவட்டம், பழைய பேராவூரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஏடுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. பெரியார், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டு களாக ஏடுகளும் எழுது பொருள்களும் வழங்கிவரு கிறார் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் சு.போசு. இந்த ஆண்டும் பேராவூரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாட துணைக் கருவிகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமையாசிரியர் சு.விஜயலட்சுமி தலை மையில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் பேராவூரணி பேரூராட்சியின் பெருந்தலைவர் நா.அசோக் குமார், கல்வியாளர் கே.வி. கிருஷ்ணன், சுப. சேகர், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், செய்தியாளர்கள் பழனியப்பன், ராஜா, ஆசிரியர்கள் ரஞ்சித் குமார், லட்சுமி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.