சமூக மாற்றத்தின் அவசியம்!
உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப் படும் இன்றைய (ஜூன் 5) தினத்தில், நமது பூமியின் நிலையை ஆராய்ந்தால் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்படுகின்றன. 2024ஆம் ஆண்டில் கார்பன் உமிழ்வு 41.6 பில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது; இது முந்தைய ஆண்டை விட 1.6 பில்லியன் டன் அதிகம். ஆனால் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் 2024 உமிழ்வு இடைவெளி அறிக்கை, உலக வெப்பமய மாதலை 1.5 டிகிரி செல்சியஸ்-க்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக கார்பன் உமிழ்வு அதிகரித்து வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.
காலநிலை மாற்றம் என்பது வெறும் இயற்கை மாற்றம் அல்ல; இது மனித சமூகத்தின் செயல்பாடு களால் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக மூலதனத்தின் இலாபநோக்கம் சுற்றுச்சூழலை வணிகப் பொருளாக மாற்றி, இயற்கை வளங்களை கட்டுப்பாடின்றி சுரண்டுவதையே ஊக்குவிக் கிறது. இயற்கையை மனித சமுதாயம் தங்களின் தனிச்சொத்தாக கருதும் தனியார்மய உரிமையும், லாப நோக்கில் செயல்படும் உற்பத்தி முறைகளுமே இந்த “காலநிலை நெருக்கடி”க்கு அடிப்படைக் காரணம்.
இதன் விளைவாக, கடும் வெப்பம், வெள்ளம், பஞ்சம், குடிநீர் பற்றாக்குறை, உயிரின அழிவுகள் என மனிதகுல வாழ்வாதாரம் பெரும்பாதிப்பை சந்திக்கிறது. உலகளவில், வளர்ந்துவரும் நாடு களில் உள்ள 80 சதவிகிதம் பேர் காலநிலை மாற்றத் தால் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சிறுபான்மையினர், ஏழை மக்கள், விவசாயி கள், தொழிலாளர் வர்க்கம், பழங்குடிகள் ஆகி யோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
வளர்ந்த நாடுகள் 1850 முதல் 2020 வரை உலகளவில் உமிழ்ந்த கார்பனில் 60 சதவிகிதம் பங்கு வகிக்கின்றன. ஒரு அமெரிக்கர் ஆண்டுக்கு சராசரி 15.2 டன் கார்பன் உமிழ்வை ஏற்படுத்து கிறார். இந்தியாவில் இது 1.9 டன் மட்டுமே. வளர்ந்த நாடுகள் தொடர்ந்து அதிக தனிநபர் உமிழ்வைக் கொண்டுள்ளன. இதனால் வளரும் நாடுகள், குறிப்பாக தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் சிறு தீவு நாடுகள் குறைந்தபட்ச உமிழ்வையே வெளிப்படுத்தினாலும், மிகக் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன.
இந்தியாவில், ஒன்றிய மோடி அரசின் கொள்கைகள் பெரும்பாலும் பெரும் மூலதனம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசைக்கு சேவை செய்வதாகவே இருக்கின்றன. இதனால் சூழலியல் பாதுகாப்பு காவு கொடுக்கப்படுகிறது. 2015-2020 காலகட்டத்தில் இந்தியாவில் 66,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சுரங்கம், பெரும் திட்டங்கள் மற்றும் “வளர்ச்சி” எனும் பெயரில் பழங்குடி நிலங்கள் சூறையாடப்படுகின்றன. மார்க்ஸ் கூற்றுப்படி “மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள வாழ்க்கைத் தொடர்பை மூலதனம் முற்றிலுமாக பிரித்துவிட் டது”. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சி, தனிநபர் பழக்க வழக்கங்களை மாற்றுவதால் மட்டு மல்ல, சமூக அமைப்பில் அடிப்படை மாற்றம் கொண்டு வருவதால் மட்டுமே சாத்தியம்.