குடவாசல் ஜூலை 25- குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் 3 வருடமாக(தற்காலிகமாக)அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் தற்போது 850 மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு கல்வி கற்க போதுமான இட வசதி இன்றி இருப்பதால் சரியான முறையில் கல்வி கற்க இயலவில்லை. எனவே கல்லூரிக்கான புதிய இடம் தேர்வு செய்து மாணவ மாணவிகள் கல்வி கற்க ஏதுவாக கல்லூரியை செயல்படுத்த வேண்டும் என்று கோரி வகுப்பை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு பி காம் மூன்றாம் ஆண்டு மாணவர் திலீப்ராஜ் தலைமை தாங்கினார்.போராட்டத்தை கைவிடக்கோரி கல்லூரி இணைப் பேராசிரியர் ஜான் பீட்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை ஏற்க மறுத்த மாணவர்கள் உடனடியாக கல்லூரிக்கு தேவையான பேராசிரியர்கள், வகுப்பறை கள்,ஆய்வுக்கூடங்கள், கழிவறைகள்,விளையாட்டு மைதானம் ஆகிய கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மாணவ,மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு வகுப்பை புறக்கணித்து கல்லூரியை விட்டு வெளியே சென்றனர்.