காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா
மன்னார்குடி, ஜூலை 16- 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மை யாருக்கு காரைக்காலில் தனிக் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இக்கோவிலில் மாங்கனித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும் மாங்கனியுடன் கூடிய பிரசாதம் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், சட்டமன்ற உறுப்பி னர்கள் அசனா, திருமுருகன், காரைக்கால் மாவட்ட ஆட்சி யர் விக்ரந்த்ராஜா, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர், சீனி யர் எஸ்.பி. ராகுல் அல்வால், முன்னாள் சபாநாயகர் சுப்பிர மணியன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
ஆசிரியர்களுக்கு மனநல புத்தாக்கப் பயிற்சி வகுப்பு துவக்கம்
தஞ்சாவூர், ஜூலை 16- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆசிரியர்களுக்கு மனநல புத்தாக்கப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை திங்கள்கிழமை துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2018 முதல் மாவட்ட மனநல திட்டம் இயங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் உள்நோயாளி, வெளி நோயாளி சிகிச்சை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகின்றன. மேலும் சமுதாய சீர்கேடுகளினால் இன்றைய மாணவ, மாணவியர்கள் பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான பிரச்ச னைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை தடுக்கும் பொருட்டு அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களை மனஅழுத்தம், தற்கொலை எண்ணங்கள் மது மற்றும் போதை பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு வழங்கவும், அதனை தடுக்கும் நோக்கத்துடனும் அவர் களுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்கள் மூலம் அவர் களை வழிநடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 25 ஆசிரியர்களுக்கு 6 நாட்கள் மனநலப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் நகரம், பூதலூர், கும்ப கோணம், பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு, திருப்பனந்தாள், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பேரா வூரணி, திருவோணம், மதுக்கூர், சேதுபவாசத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 25 ஆசி ரியர்களுக்கு மனநல பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் மேலும் 150 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அ.காந்தி, மாவட்ட மனநல மருத்துவர் பி.மங்கை யர்க்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.