tamilnadu

img

லெட்சுமாங்குடி மாவூர் சாலைப் பணிகள் தீவிரம்

மன்னார்குடி, அக்.26- குடவாசலில் இருந்து கொரடாச்சேரி லெட்சு மாங்குழு கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் வழியாக மாவூர்  வரை’யுள்ள  35.6 கிமீ தூர மாவட்ட முக்கிய சாலை த்திட்டப் பணிகள் தேசிய நெடுஞ்சாலை துறையின் நிதி ஒதுக்கீட்டில் 5.6 அகல தார் சாலை  புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.  இதனால் இந்த முக்கிய சாலையை அன்றாடம் பயன் படுத்தும் பத்தாயிரக்க ணக்கான மக்கள் மகிழ்ச்சி யடைவார்கள் என எதிர் பார்க்கலாம். குறிப்பாக பண்டிதக்குடி நாகங்குடி பழையனூர் வடபாதிமங்க லம் அரிச்சந்திரபுரம் திட்டச்சேரி இளமங்கலம் ஊட்டியாணி திருநாட்டி யத்தாங்குடி மேலகோட்ட கம், கீழகோட்டகம், மாவூர் கேட் சித்திரையூர் சிக்கவேலி மாவூர் வரை உள்ள பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் வட்டத்தலை நகரான கூத்தாநல்லூ ருக்கும் மாவட்ட தலைநக ரான திருவாரூருக்கும் தஞ்சை திருச்சி போன்ற நகரங்களுக்கு வந்து போவ தற்கு சிரமப்பட்டு வரு கின்றனர்.  அகலம் குறைந்த குண்டுங் குழியுமான வட பாதிமங்கலம் சாலையில் மழைகால இரவுகளில் ஊர் திரும்புவது பெரும் போ ராட்டமாக இருந்து வரு கிறது. இந்தச் சாலை அமைக் கப்பட வேண்டிய அவசியம் குறித்து தீக்கதிரில் சென்ற ஆண்டு விரிவான செய்தி வந்திருந்தது. இப்போது இந்தச் சாலை 5.5 மீட்டர் தார்  பயன்பாட்டு அகலமுள்ள சாலையாக ஒரே சீராக அமைக்க இருப்பதால் இரவில் பாதுகாப்பானதா கவும் சிரமமின்றி பயணம் செய்வதற்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. குடவாசலிலிருந்து 3.6 கிமீ தூரத்தில் இந்த பணிகள் துவக்கப்பட்டு 6.6 கிமீ வரை ஒரு கட்டமாகவும், லெட்சுமாங்குடி பாலத்தி லிருந்து அதாவது 17.6 கி மீட்டரிலிருந்து 35.6 கிமீ மாவூர் வரையில் ஒரு கட்டமா கவும் சாலை அமைக்கும் பணி நடைபெறவிருக்கிறது. இடையிலுள்ள சாலை ஏற்கனவே மாநில நெடுஞ்சா லைத் துறை நிதி ஒதுக்கீட்டில் போடப்பட்டு நல்ல நிலை யில் உள்ளது என தேசிய நெடுஞ்சாலைப் பிரிவின் தகவல்கள் கூறுகின்றன. ரூ.30 கோடி நிதி ஒதுக்கீட் டில் தமிழ்நாடு நெடுஞ்சா லைத் துறையில் அமைக் கப்பட்டுள்ள தேசிய நெடுஞ் சாலை பிரிவின் தஞ்சை கோட்டமும் அதன் கீழமை நாகைப்பட்டினம் உதவி கோட்டத்தின் மேற்பார்வை யில் இப்பணி வேகமாக நடை பெற்று வருவதால் 31.1. 2020-க்குள் இப்பணி முடிவ டையும் என எதிர்பார்க்கப்படு கிறது.