tamilnadu

img

நூறு நாள் வேலை செய்ததில் கூலி பாக்கி: உடனே வழங்க கோரிக்கை

திருவாரூர், பிப்.9- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் ஊராட்சியில் நூறு நாள்  வேலை செய்யும் பயனாளிகளிடம், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறு ப்பினர் ஐ.வி.நாகராஜன் வேலை செய்யும் இட த்திற்கு நேரில் சென்று குறைகளை கேட்ட றிந்தார். நூறு நாள் வேலை தொடர்ந்து வழ ங்குவது கிடையாது, வேலைத் தொடர்ந்து வழங்க வேண்டும். வேலை சட்டக் கூலியை உயர்த்தி வழங்கிட வேண்டும். இதுநாள் வரை நூறு நாள் வேலை செய்ததில் பாக்கி உள்ள தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பய னாளிகள் கூறினர்.  உங்களது அனைத்து கோரிக்கைகளை யும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பேன். விரைவாக இந்த கோரி க்கைகள் நிறைவேற்றப்படும். அப்படி நிறை வேற்றாத பட்சத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத்துப்பேட்டை ஒன்றியக் குழுவின் சார்பில் அதை நிறைவேற்றுவதற்கான போரா ட்டத்தை முன்னெடுப்போம் என்று ஐ.வி.நாக ராஜன் கூறினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமி ழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.ரா ஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் கு.பாலசுப்ர மணியன் ஆகியோர் உடனிருந்தனர்.