மன்னார்குடி, பிப்.11- மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் தலைவர் சா.கோவிந்தராஜன் தலை மையில் நடைபெற்றது. பொதுச் செயலா ளர் சா.சம்பத் முன்னிலை வகித்தார். கூட் டத்தில், காவிரி டெல்டா பகுதிகளை பாது காக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல மாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி, பாராட்டினையும் இச்சங்கம் தெரிவிக்கி றது. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்கிற முதல்வரின் அறிவிப்பை பொது மக்கள் சார்பாக மனதார இச்செயற்குழு வரவேற்கி றது. சமீப காலமாக விவசாயிகளிடம் நில விய அச்சத்தையும், மன உளைச்சலையும் தமிழக முதல்வர் அறிவிப்பு போக்கியுள் ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. மேலும் இதனை சட்ட ரீதியாக உறுதி செய்ய சட்டசபையில் நிறைவேற்றி குடியரசு தலைவர் அனுமதி பெற்று நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. அரசு நெல் கொள்முதல் நிலையங்க ளில் கால தாமதமின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சா.நவநீத கிருஷ்ணன், துணைத்தலைவர் ம.பத்மநாபன், ம.இராம சாமி, செ.குமார், அ.பிரான்சிஸ் அமல்ராஜ் கலந்து கொண்டனர்.