tamilnadu

img

அரசு ஆதரவில்லை ஆனாலும் வளர்ச்சி... பட்டியலின இளைஞரின் தன்னம்பிக்கை

திருவாரூர், ஜூலை 13- மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் உதவியில்லாமல் பட்டி யலினத்தை சேர்ந்த இளைஞர் ஒரு வர் தன்னந்தனியாக தொடர் முயற்சி  செய்து தொழில் முனைவோ ராக வளர்ந்து வருகிறார். இளை ஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் க.கருணாநிதி (36) செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பெருந்தரக்குடி என்னும் சிற்றூர் சொந்த கிராமத்தில் சிறு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். கடந்த  20 ஆண்டு காலமாக சொந்த முயற்சி யில் வணிகத்தில் ஈடுபட்டு வருகி றேன். பின்தங்கிய நமது மாவட்ட த்தில் சிறு, குறு தொழில்கள் வளர  வேண்டும் என்ற எண்ணத்தோடு தனியாரிடம் கடன் கேட்டு, தற்போது ‘கனிஷ்கா மார்க்கெ ட்டிங் மற்றும் சோப் ஒர்க்ஸ்’ எனும்  நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதன் மூலம் 50 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பும் அளித்து வரு கிறேன்.  மத்திய, மாநில அரசுகளி டமும், வங்கிகளிடமும் தொழி ற்கடன் பெறுவதற்கு எவ்வளவோ முயற்சித்தும் கிடைக்கவில்லை. சிறிய அளவில் தொடங்கப்பட்ட எனது வணிகம் இன்று மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது.

பட்டி யல் இனத்தின் சராசரி குடும்ப த்தைச் சேர்ந்த எனது வளர்ச்சியில் அரசும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் கரம்கோர்த்தால் மேலும் பன்மடங்கு வளர்ச்சியின் மூலமாக நான் வசிக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எனது நிறுவ னம் உதவிகரமாக இருக்கும் என்று  பெருமையுடன் கூறினார். இந்நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. மா வட்ட தொழிற்மைய பொது மேலா ளர் எச்.ரவிச்சந்திரன், சிறு, குறு  தொழிற்முனைவோர் சங்க மாவ ட்ட தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், பொ துச் செயலாளர் எஸ்.வருண்காந்தி மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சேவை அமை ப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு  இளைஞர் எஸ்.கருணாநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.