tamilnadu

img

பேரளம் ரேசன் கடையில் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு

குடவாசல், அக்.19- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் கடைவீதியில் ரேஷன் கடையில் வழங்கும் பொருள் கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி அனைத்துப் பொருள்களும் ஒரே நாளில் வழங்கிட வேண்டும். ரேஷன் பொருட்கள் அனைத்தும் முறைகேடு யின்றி எடையை குறைக்காமல் வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி.அம்சம் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜி.கலைச்செல்வி கண்டன உரையாற்றினார். பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைக் காமல் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில்  அரசு, 250  குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை திறக்க வேண்டும். தரமான அரிசி, அட்டை ஒன்றுக்கு மூன்று லிட்டர் மண்ணெண்ணெய்‌ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சரியான அளவில் அனைத்து ரேஷன் கார்டுக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.  ஒரு‌ மாதத்தில் பொருட்கள் வழங்கப்படாமல் இருப்பின் அடுத்த மாதத்தில் சேர்த்து வழங்க வேண்டும். பண மதிப்பிழப்பு நடவ டிக்கைக்குப் பிறகு உழைக்கும் பெண்களின் சிறுசேமிப்புகள் குறைந்து, வாங்கும் சக்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமைக ளை மாற்றும் வரை மாதர் சங்கம் அடுத்தடுத்த போராட்டங்களை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.  ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சந்திரா, ராஜேஸ் வரி, பத்மா, தனம், பரிமளா தேவி உள்பட 40 க்கு மேற்பட்ட மாதர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.