tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு வாழ்த்து

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டத்தில் மதச்சார் பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 வது மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஜெ. முகமது உதுமான், பண்டாரவடை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள ஜெயசீலன், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் 11-வது வார்டு ஒன்றியக் கவுன் சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.வேதரத்தினம்,  நெடும்பலம் ஊராட்சி 8 வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற கௌரி தண்டாயுதபாணி உள்ளிட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரார் ை திருத்துறைப்பூண்டியில் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன், நன்னிலம் ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் உடன் இருந்தனர்.

;