tamilnadu

img

இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஜூன் 13- மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் 3 இடங்க ளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. விவசாயிகள், ஏழைகளுக்கு வழங்கப் படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மங்கைநல்லூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஜி.வைரவன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், வட்டக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, மனோகரன், பிரேமா ஆகியோர் உரையாற்றினர். பெரம்பூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், ஒன்றிய செயலாளர் விஜயகாந்த், கே.என்.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றினர். ஸ்ரீகண்டபுரம் கடைவீதியில் ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பரமானந்தம், செல்வநாதன், அன்பழகன், இராமகுரு உரையாற்றினர். ஆர்ப்பாட்டங்களில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.