திருத்துறைப்பூண்டி, ஜூன் 7- அமெரிக்க கறுப்பின இளை ஞர் படுகொலையை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அலு வலகம் முன்பு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கு.பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செய லாளர் முருகையன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ் மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் சி.செல்லதுரை, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திர சேகர ஆசாத் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.