tamilnadu

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் செய்திகள்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி
திருவள்ளூர், ஜூன் 17- திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள் வறண்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவு கிறது. தண்ணீருக்காக மக்கள் தினந்தோறும் காலி குடங்களு டன் அலைகிறார்கள்.  திருவள்ளூர் அரசு மருத்துவமனை 100 படுக்கை வசதி கொண்டது. இங்கு திருவள்ளூர், மணவாளநகர், திருவாலங்காடு, ஈக்காடு, பூண்டி, கடம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிக ளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்காக மகப்பேறு சிகிச்சை பிரிவு அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது பழுதடைந்துள்ளதால் குடிநீர் விநியோகிப்பது கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோல் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் தண்ணீரும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் கிடைக்காமல் நோயாளி கள் கடும் அவதிப்படுகின்றனர். இதனால் அவர்கள் வெளியில் சென்று ஒரு லிட்டர் குடிநீரை 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும், 5 லிட்டர் கேன் 50 ரூபாயும் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்ற னர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி நோயளிகள் படும் அவதியை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிதண்ணீர் கேட்டு போராட்டம்
திருப்போரூர், ஜூன் 17-  காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதி ஊராட்சியின் 1 ஆவது வார்டு பகுதியில் அம்பேத்கர் தெரு, காமராஜர்தெரு, காந்திதெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிக்கு பெரிய ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரிய ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் குடிநீரை, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏற்றி, ஊராட்சியின் அனைத்து பகுதிக்கும் பிரித்து வழங்க வேண்டும். ஆனால், ஊராட்சி நிர்வாகம் முறையாக இப்பணியை மேற்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வதற்கான குழாய்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அருகில் வசிக்கும் மக்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீரேற்றும் முதன்மை குழாயில் இணைப்பு வழங்கி குடிநீர் பெற்று வருகின்றனர். இதனால், மின்மோட்டார் பழுது மற்றும் மின்சார தடை ஏற்பட்டதால் 1வது வார்டு பகுதிக்கு கடந்த 5 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தும் நடவடிக்கை யில்லை.  இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் திங்களன்று (ஜூன் 17) மானாம்பதி ஊராட்சியின் மற்ற பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக இயக்கப்படும் மின்மோட்டார் அறைகளை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.