tamilnadu

img

தண்ணீர் பிரச்சனையை எளிதில் கையாளும் பொன்னேரி அரசு மருத்துவமனை

திருவள்ளூர், ஜூலை 24-   திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு சுமார் 1500 புறநோயாளிகளும், 100க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு குடிநீர், சமையல் உள்ளிட்ட பலவேறு தேவை களுக்கு  நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 50ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.  தற்போது தண்ணீர் பிரச்சனை தமிழகம் முழுவதும் கடுமையாக உள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில்  ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடத்திலும், 24 இடங்களில் மணலியில் உள்ள சிபிசிஎல் பொதுத்துறை நிறுவனத்தின் உதவியுடன் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்து மழை நீரை சேமிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது. தொடர்ந்து நிலத்தடி நீர் பாதுகாக்க ப்பட்டு வருவதால், உள்ளாட்சி நிர்வாகத்திட மிருந்து  கூட குடிதண்ணீரை எதிர்பார்ப தில்லை.   இதனால் மழைநீர் வீணாகாமல் சேகரிப்பதோடு, வளாகமும் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதாக மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) அனுரத்னா தெரிவித்தார். மேலும் ஆவசர விபத்து பிரிவு ஒன்றும் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.