tamilnadu

img

குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

திருத்தணி அருகில் உள்ள தாடூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மாதர் சங்கத்தின் செயலாளர் இ.மோகனா, பொருளாளர் ஏ.பத்மா, விவசாய சங்க திருத்தணி செயலாளர் அப்சல்அகமத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.