tamilnadu

img

டிரம்ப் வருகையை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், பிப்.24-  அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக  வருகை புரிந்துள்ளார். இந் நிலையில்  வேளாண் பொருட் கள் இறக்குமதிக்கான வர்த்தக ஒப்பந்தமும் போட வுள்ளதாக கூறப்படுகிறது.  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது இது போன்ற ஒப்பந்தங்கள் போடுவதால் இந்தியாவிற்கு கடும் பொருளாதார நெருக் கடிகள் ஏற்படக்கூடும். குறிப்பாக வேளாண் சம்மந்த மான வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டால் நமது நாட்டில் ஆண்டுக்கு  ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான பால் உற்பத்திப் பொருட்கள்,  இறைச்சி கோழி, ஆப்பிள், கோதுமை, சோளம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்யப்டும். அதிலும் 100 விழுக்காடு இறக்குமதி வரிகள், மற்றும் சுங்க வரிகள் ரத்து செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் கறவைமாடு வளர்ப்பில் ஈடு பட்டுள்ள 10 கோடி விவசாயி குடும்பங்கள், கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 4.8 கோடி விவசாயி குடும்பங் கள் மற்றும் கோதுமை, சோளம் பயிரிடும் கோடிக் கணக்கான விவசாய குடும் பங்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இது போன்ற மக்களை பாதிக்கும் ஒப்பந்தங்களை தவிற்க வேண்டும் என  வலியுறுத்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்க ளன்று (பிப்.24)  ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யப் பொருளாளர் எம்.சிவக்  குமார் தலைமை தாங்கி னார். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செய லாளர் பி.துளசிநாராயணன், மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், மாவட்ட துணை நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர்கள் பி.ரவி, எம்.ரவிக்குமார், பி.கதிர் வேல்,விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்  இ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.