tamilnadu

img

புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தில் விரிசல்

திருவள்ளூர், செப்.22-  எல்லாபுரம் ஒன்றி யத்திற்கு உட்பட்ட தாமரை ப்பாக்கம் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஒன்றிய  நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த தாமரைப்பாக்கம், அம்மணபாக்கம், பூசாலி மேடு, அணைக்கட்டு பகுதி ஆகிய இடங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயின்ற னர்.இதனால் இட நெருக்கடி ஏற்படவே புதியதாக கட்டிடங்கள் எழுப்ப வேண்டும் என பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்திற்கு ரூ. 4.50-லட்சம்  மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து 2005ஆம் ஆண்டு பள்ளிக் கட்டிடம் திறக்கப்ப ட்டது.இதில் 6, 7, 8-ஆகிய மூன்று வகுப்புகள் நடை பெற்று வந்தன. இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்கும் நல்ல சூழல் நிலவி வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் பழுதுபட்டுள்ளது என சொல்லி ரூ 2 லட்சம் வரை பணம் எடுத்துள்ளனர். இவ்வளவு பணம் செலவு  செய்த பிறகும் கட்டிடம் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் 6,7,8 ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களையும் பழைய கட்டிடத்தில் உள்ள வகுப்பறைகளிலேயே இணைத்துள்ளனர்.இதனால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மாண வர்கள் மத்தியில் கல்வி கற்கும் சூழல் பாதித்துள்ளது. இதன் காரணமாக மாண வர்கள் சேர்க்கையும் குறைந்து தற்போது 120 மாணவர்கள் வரை உள்ள னர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், மாவட்டக் குழு உறுப்பினர் சி.பாலாஜி, கிளைச் செய லாளர் தேவேந்திரன் ஆகி யோர் கூறுகையில் குளத்தின் அருகே கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம் தரமாக கட்ட வில்லை. குடிசை வீடுகள் கட்டினால் கூட நீண்டகாலம் நீடித்து நிற்கிறது, கான்கிரீட்  கட்டிடம் மிகவும் குறுகிய காலத்தில்  சேதமடைந்தது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். விரைவில் புதிய தரமான பள்ளிக் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற னர்.