திருவள்ளூர், செப் 7- மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், சனிக்கிழமையன்று (செப்.7) வடசென்னை அனல் மின் நிலையம் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு வடசென்னை அனல்மின் நிலைய கிளைத் தலைவர் இ.ஜெயவேல் தலைமை தாங்கினார். வடக்கு மண்டலச் செயலாளர் ஆர். ரவிக்குமார், கிளை நிர்வாகி கள் கே.வெங்கட்டையா, எஸ்.சுந்தரம், கே.வெங்கடே சன், சலீல்குமார் , அருள்நா தன், சீனிவாசன், இ.ரவி, அகமஸ் ஷரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலா ளர் எஸ். ராஜேந்திரன் பேசுகையில், ‘மத்திய, மாநில அரசுகள் பொது த்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையில் வேகமாக ஈடுபடுகின்றன. அதானி போன்ற பெருமுதலாளிக்கு நிலக்கரி சுரங்கம் கொடுத்துள்ளதால், அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்கும் இடத்தில் அதானி உள்ளார். இது முற்றிலும் தனியார் மய நடவடிக்கையாகும். இதனால் மின்சாரமும் சந்தை பொருளாக மாறும். மேலும், ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளை வலியு றுத்தி அக்டோபர் 10 ஆம் தேதி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடை பெற உள்ளது” என்றார்.