திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் வினியோகம் செய்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு கடந்த இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திங்களன்று (ஜூன் 17) நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் பி.கதிர்வேல், தென் சென்னை பொருளாளர் கே.நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் குமாரவேல், ஆனந்தன், பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.