tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் கைவிட வலியுறுத்தி பிரச்சாரம்

தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் புதனன்று (ஆக.21) பிரச்சார இயக்கத்தை மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் துவக்கி வைத்தார். பங்ளாமேடு, கே.ஜி.கண்டிகை, எல்.என்.கண்டிகை, புஜ்ஜிரெட்டி கண்டிகை, மத்தூர் நல்லாட்டூர் ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் ஏ.அப்சல் அகமது தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.அந்தோணி, என்.கங்காதரன், வட்டக்குழு உறுப்பினர்கள் சம்மந்தம், கரிமுல்லா, பாலாஜி, ரீசர், தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.