கும்மிடிப்பூண்டி,மார்ச் 1 தோழர் பி.அய்யலு நினைவு அறக்கட்டளை சார்பில் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுரத்னாவிற்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் நடை பெற்றது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே துறை யில் சாதாரண தொழிலாளர்க ளின் நலனுக்காக போராடி மறைந்த தோழர் பி.அய்யலு வின் நினைவு அறக்கட்டளை சார்பில் மக்கள் மருத்துவ ரும் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருமான அனுரத்னா வுக்கு சனிக்கிழமையன்று (பிப்-29) இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தொழிற்சங்கத் தலைவர் வி.சாந்தகுமார் தலைமை தாங்கினார். சகோதரி பி.ஸ்வாதி வரவேற்றார். இதில் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எஸ். ஜனக ராஜ், மருத்துவர் அம லோற்பநாதன், பேராசிரியர் வ.விஜயரங்கன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.மக்கள் மருத்துவர் அனுரத்னா ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பி. துளசி நாராயணன் முன்னிலை வகித்தார். அய்யலு மனைவி வெங்கட்ட சுப்பம்மா, கிரிதரன்,பிரசன்னா,விஜி பி.ஜெயநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.