tamilnadu

பொங்கலுக்கு திருவண்ணாமலை பேருந்து வழித்தடத்தில் மாற்றம்

திருவண்ணாமலை, ஜன. 11– தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் மூலமாக 2020 ஆம் ஆண்டு பொங்க லையொட்டி வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி  வரை சென்னை கோயம்  பேடு பேருந்து நிலையத்தி லிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இயக்கப் பட்டு வரும் சில மார்க்க பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகை யில் பயணிகளின் வசதிக்காக  கோயம்பேடு பேருந்து நிலை யத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு கீழ்கண்டவாறு மாற்றம் செய்து இயக்கப்படவுள்ளது.  இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக திரு வண்ணாமலை மண்டலம்  சார்பாக வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பில் சென்னை – திருவண்ணா மலை, வந்தவாசி, போளூர் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், சென்னை – செய்யாறு, ஆரணி பேருந்துகள் பூந்த மல்லி தற்காலி பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

;