திருவண்ணாமலை, நவ. 13- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பாக நடந்த விழாவில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் 12 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் திறந்து வைத்தும், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள நவீன ஆவின் பாலகம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உரையாற்றினார். இந்த விழாவில் 450 பால் உற்பத்தி யாளர்களுக்கு ரூ.1.88 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகையையும் அமைச்சர் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் க. சு. கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தூசி கே. மோகன் (செய்யாறு), கு. பிச் சாண்டி (கீழ்பென்னாத்தூர்), திருவண்ணா மலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் ஒன்றியப் பெருந்தலைவர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.