திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறும் விளையாட்டு போட்டியை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராச்சந்திரன் வியாழனன்று (பிப். 13) துவக்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, மண்டல முதுநிலை மேலாளர் பெரியகருப்பன், மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நான்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.