tamilnadu

img

பாலத்தை சீரமைக்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஆக. 27- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பாழடைந்த பாலத்தை  அகற்றிவிட்டு, புதிய பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகளும்,  பொதுமக்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், காயம்பட்டு  சென்ன சமுத்திரம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்பட்டு, வலசை போன்ற 10க்கும்  மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள பாலம்  கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப் பட்டது. தற்போது பாலம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால்  வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர்.  திருப்பத்தூர் மலைத்தொடர் பகுதியில் உள்ள தீத்தாண்டம்பட்டு, வளையாம்பட்டு, வலசை உள்ளிட்ட கிராம விவசாயிகள், தங்களின் சாகு படி பொருட்களை இந்த பாலத்தின் வழியாகத்தான் விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வாழ்வாதார தேவை களுக்காக செல்லும் ஏராளமான பொதுமக்கள் இந்த பாலத்தை கடந்தே சென்று வர வேண்டியுள்ளது. குடிமாராமத்து பணிகள் என்ற பெயரில் தேவையற்ற பணிகளை அவசர கதியில் முடித்து கணக்கு காட்டும் சில நிகழ்வுகள் நடந்து வரும் நிலை யில், 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக விளங்கும் இந்த பாலத்தை மாவட்ட நிர்வாகம்  போர்க்கால அடிப்படை யில் சீரமைக்க  வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை  விடுத்துள்ளனர்.