tamilnadu

img

அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

 திருவண்ணாமலை, நவ.4- தமிழகத்தில் மாநில அளவிலான 47 ஆவது ஜவஹர்லால் நேரு நினைவு அறிவியல் கண்காட்சி, அண்மையில்  கரூரில் நடை பெற்றது. இதில்  32 மாவட்டங்களைச் சேர்ந்த  மாணவ, மாணவியர்  தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணா த்தூர் தாலுக்கா, கொளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள், சத்யா, தமிழரசி ஆகியோர், சித்த மருத்துவம்  குறித்த தகவல்களுடன், கூடிய படைப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. மேலும், தேசிய அளவிலான, அறிவியல் கண்காட்சியில் இவர்கள்  பங்கேற்க தகுதி பெற்றார்கள்.  பரிசு பெற்ற மாணவி களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் அன்பழ கன், எழிலழகன்   தலைமை ஆசிரியர் வீரமணி, அறிவி யல் பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.