tamilnadu

திமுக முன்னாள் கவுன்சிலர் கொலை...

திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் திமுகவைச் சேர்ந்த முன் னாள் கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டிக்  கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை அதிமுக நகர செயலாளர் கனகராஜ் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தது திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் பங்க் பாபு என்று கூறப்படுகிறது.இந்நிலையில் அதற்கு பழிதீர்க்கும் விதமாக பங்க் பாவுவை மூன்று பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.வெள்ளியன்று (டிச. 4) திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் காபி குடிக்க வந்த பங்க் பாபுவை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது.தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டி துடிதுடிக்க கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்மநபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

;