tamilnadu

img

திருவண்ணாமலையில் கல்வி கருத்தரங்கம்

திருவண்ணாமலை, ஆக. 10- புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து திருவண்ணாமலையில் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. வேங்கிக்கால் பகுதியில் நடை பெற்ற கருத்தரங்கத்தை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தியது. மாவட்டச் செயலாளர் மு.பாலாஜி தலைமை  தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசி ரியர் கூட்டணி சி.அ.முருகன் வரவேற்றார். தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா, எழுத்தாளர் விழியன் ஆகியோர் கருத்துரையாற்றினர். கலைஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழி யர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர். கிளை செயலாளர் செந்தில்குமார் நன்றி  கூறினார். புதுச்சேரியைச் சேர்ந்த கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பேசியபோது, “புதிய தேசிய கல்விக் கொள்கையில் சில சாதக மான அம்சங்கள் இருந்தாலும்,  பாதகமான  விஷயங்களில் அதிகமாக இடம் பெற்றுள் ளது. குழந்தைகள் தங்கள் வீடுகளையே மறக்க வைக்கும் அளவிற்கு, கல்விக் கொள்கையின் வரைவு வெளிப்படுத் துகிறது. இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, பட்ஜெட்டில் கூட  நிதி ஒதுக்கப்  படவில்லை” என்றார். பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகையில், “வரைவு அறிக்கையை படிக்காமல் நாங்கள்  பேசுவதாக கூறுகிறார்கள். அதை பொது மேடையில் விவாதிக்கலாம். மக்களிடம் கருத்து கேட்காமல், இந்த வரைவு ஆவணம்  கொடுக்கப்பட்டுள்ளது .  மாநில உரிமைக்கு எதிரான இந்த புதிய தேசிய கல்விக் கொள்  கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.