சட்டமன்றத்தில் மின்துறை அமைச்சர் அறிவித்தபடி ஐடிஐ படித்தவர்களை கள உதவியாளர்களாக நியமிக்க வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.ரவி தலைமை தாங்கினார். கே.காங்கேயன், வி.எம். வெங்கடேசன் மற்றும் கல்வி மையம் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.