தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், பி.கண்ணன், எம்.பிரகலநாதன், ஆர்.பாரி, டி.கே.வெங்கடேசன், கே.வாசுகி, ஆர். அண்ணாமலை, ஏ.லட்சுமணன், கே.கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.