ஆரணி, மே 28 -திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி யைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலுக்கான இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சின் சான்றிதழைப் பெற்று அசத்தியுள்ளார். ஆரணி வீராசாமி தெருவைச் சேர்ந்த நித்யானந்தம் - திவ்யா தம்பதியின் இரண்டரை வயது மகள் லித்திகா, ஒரு வயதுமுதலே பெற்றோர் சொல்லும் விஷயங் களை நினைவில் நிறுத்தி திருப்பிச் சொல்லி அசத்தி வந்துள்ளார். குழந்தையின் ஆற்றலை புரிந்துகொண்ட தாய் திவ்யா, உலக நாடுகளின் பெயர்கள், அவற்றின் கொடிகள், பழங்கள், விலங்கினங்களின் பெயர்கள் எனபலவற்றை சொல்லிக்கொடுத்து வந்துள் ளார். அவர் கொடுத்து வந்த பயிற்சியின் பலனாக இரண்டரை வயது சுட்டிப் பெண் லித்திகா, தற்போது 35 தலைப்புகளில் பல்வேறு விஷயங்களை நினைவில் வைத்து, அவை குறித்து கேட்பவரிடம் மழலைக் குரலில் கூறி அசத்துகிறார்.லித்திகாவின் இந்தத் திறமையைப் பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கா ர்ட்ஸ் அமைப்பு “அவுட்ஸ்டாண்டிங் மெமரி”விருதை அளித்து, அதற்கான சான்றிதழை யும் வழங்கியுள்ளனர்.சின்னஞ்சிறு குழந்தைகளின் மூளைக்குள்நாம் எந்த விஷயத்தை புகுத்தினாலும் பசுமரத்தாணி போல் அது பதிந்து போகும். அந்த வகையில் சிறுமி லித்திகாவின் சாதனைகள் அவரது பெற்றோரின் முயற்சியால் இன்னும் தொடரும் என எதிர்பார்க்க லாம்.