tamilnadu

img

தனது திருமணத்திற்காக 850 கி.மீ சைக்கிளில் பயணித்தவர் முகாமில் தங்கவைப்பு

பலராம்பூர் (உ.பி.), ஏப்.19- ஊரடங்கு அமலானதால் லூதியானாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்த நபர் தனது திருமணத்திற்காக 850 கி.மீ சைக்கிளில் பயணித்துள்ளார். பஞ்சாபில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற அவரை, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் ஞாயிறன்று தங்க வைக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு குமார் சவுகான், (24). பஞ்சாபில் லூதியானாவில் டைல்ஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏப்.15-ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்துப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த சோனு குமார், நண்பர்கள் மூன்றுபேருடன் சைக்கிளில் செல்ல திட்டமிட்டார்.

இதையடுத்து ஒரு வாரமாக இரவு, பகல் சைக்கிளில் பயணித்த நான்குபேரும் உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பிப்ரா ரசூல்பூர் பகுதியை சேர்ந்தவர் சோனுகுமார் சௌஹான் (இந்தப் பகுதி நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது) இவரது திருமணம் ஏப்.15-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் லூதியானாவிலிருந்து சைக்கிளிலில் புறப்பட்டார். சோனு லூதியானாவில் ஒரு டைல்ஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். கிட்டத்தட்ட 850 கி.மீ., பயணித்த அவர்கள் இன்னும் ஒரு 150 கி.மீ. பயணித்திருந்தால் சோனுவின் கிராமத்தை அடைந்திருக்க முடியும். அதற்கு முன்னதாக அவர்கஙள காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு பால்ராம்பூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சோனு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இன்னுமொரு 150 கி.மீ. பயணித்திருந்தால் நான் வீட்டை அடைந்திருப்பேன் எனது திருமணம் எளிமையாக நடந்திருக்கும். கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இருப்பினும், உடல்நலம் மிக முக்கியமானது, திருமணம் பின்னர் நடைபெறலாம் எனக் கூறியிருக்கிறார்.

பலராம்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவ்ரஞ்சன் வர்மா கூறுகையில், சோனுவும் அவரது நண்பர்களும் மாவட்டத்திற்குள் நுழையும் போது தடுத்து நிறுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சோதனை முடிவுகள் 14 நாட்களில் வைரஸ் தொற்று இல்லையென்று வந்தால் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.