tamilnadu

img

தனியார் பேருந்து ஓட்டுனர் அலட்சியத்தால் பெண் பலி

அவிநாசி அருகே அம்மாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையத்தில் தெக்கலூர் பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண் அவிநாசி செல்வதற்காக தனியார் பேருந்தில் காலை நேரத்தில் ஏரியுள்ளார். இந்நிலையில் தனியார் பேருந்து நடத்துனர்,  பேருந்து அவிநாசி செல்லாது பைபாஸ் வழியாக செல்லும் என கூறியதால் அந்த பெண் இறங்க முற்படும் போது பேருந்தில் இருந்து இறங்குவதற்குள் ஓட்டுநர் பேருந்தை எடுத்ததால் பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த பகுதியில் தனியார் பேருந்தும், அரசு பேருந்தும், அவிநாசி பேருந்து நிலையம் மற்றும் தெக்கலூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் பைபாஸ் வழியாக சென்று விடுகின்றனர். மேலும் அவிநாசி பேருந்து நிலையம் செல்லாமல், சுமார் இரண்டு கிலோமீட்டர் முன்பே பைபாஸில் ஏறும் வழியிலுள்ள தேநீர் கடை அருகே அவிநாசி என்று பல பேருந்துகள் பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதன் காரணமாக பலமுறை பயணிகளும் பொதுமக்களும் தெக்கலூர் மற்றும் அவிநாசி பகுதியில் பேருந்துகளை சிறைபிடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது . இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பேருந்துகள் பைபாஸில் செல்வது தொடர்கதையாகி விட்டது, இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அதிகாரிகள் கவனம் செலுத்தி பேருந்துகள் அவிநாசி மற்றும் தெக்கலூர் பகுதியில் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்