tamilnadu

img

வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம், நிவாரணம் தமிழக முதல்வர் தலையிட தொழிற்சங்கங்கள் கோரிக்கை

திருப்பூர், மார்ச் 24 – கொரோனா அச்சுறுத்தல் காரண மாக வேலையிழக்கும் தொழிலாளர்க ளுக்கு ஊதியம் மற்றும் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் தலையிடு மாறு திருப்பூர் மாவட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத் துள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று சிஐடியு அலுவலகத் தில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், துணைச் செயலாளர்கள் ஜி.சம்பத், பி.பாலன், ஒய்.அன்பு, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் என்.சேகர், வி.பி.பழனிசாமி, எல்பிஎப் செய லாளர் ஆர்.ரங்கசாமி, பூபதி, ஐஎன்டி யுசி செயலாளர் ஏ.சிவசாமி, எம்எல்எப் செயலாளர் மு.சம்பத், மனோகரன், எச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்து சாமி, நிர்வாகி எம்.சண்முகபாண்டி யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திருப்பூரில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் கார ணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண மான சூழல் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொரோனா நோய் பரவாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண் டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை வர வேற்கிறோம். மேலும் தமிழக முதல் வர் அறிவித்துள்ள குறைந்தபட்ச நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை யும் வரவேற்கிறோம். மத்திய, மாநில  அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங் களில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு விடுமுறைக்கான முழு சம்ப ளத்தையும்  பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும் என்று அரசுகள் அறிவித்துள்ளது. திருப்பூரில் பனியன் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 24ஆம் தேதி முதல் விடுமுறை அறிவித்துள் ளது. எனவே மத்திய, மாநில அரசுகள்  அறிவித்துள்ளபடி முழு சம்பளம் தொழி லாளர்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் கட்டு மானம், சுமைப்பணி, சாலைப் போக்கு வரத்து, விசைத்தறி உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கும் உடனடியாக ரூ.5ஆயி ரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை  எடுத்து தொழிலாளர் குடும்பங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என் றும் அனைத்து தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் லட்சக் கணக்கில் புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

அவர்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்திட  உரிய முறையிலான மருத்துவ பரிசோதனை செய்யவும், சுகாதாரமான  தங்கும் வசதி ஏற்படுத் திக் கொடுத்து, நோய் தொற்று பரவா மல் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் வங்கி கடன், காப்பீடு பாலிசி, இருசக்கர வாகன கடன், தனியார் நுண்நிதி கடன் நிறு வனங்களில் பெற்றுள்ள கடன்களை, இப்போதைய நிலைமை சீராகும் வரை  திரும்பச் செலுத்த கால அவகாசம் வழங்குவதுடன், வட்டி தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த தொழிலாளர்களின் கோரிக் கைகள் மீது போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுத்து, நிறைவேற் றுமாறு தமிழக அரசை அனைத்து தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண் டுள்ளன.