திருப்பூர், ஆக. 20- இந்தியாவின் எதிர்கால சந்ததியின் கல்வி பெறும் உரிமையைக் கேள்விக் குறியாக்கும் புதிய கல்விக் கொள்கையை யும், கார்ப்ரேட் கனிமக் கொள்ளைக்கு வாசல் திறந்துவிடும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டத்தையும் கைவிட வலியு றுத்தி திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் எதிரில் வியாழனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன் தலைமை வகித் தார்.
மேலும் மாநிலக்குழு உறுப்பினர் கவி ஞர் கோவை சதாசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீட்டு சட்டத்தின் பாதகமான அம்சங்களை விளக்கிக் கண்டன உரையாற்றினர். முன்ன தாக பாடகர் து.சோ.பிரபாகரன், கவிஞர் பா.ராஜேஷ் ஆகியோரின் பாடல், கவிதை நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் தில் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்று மத்திய அர சின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து கண்டனங்களை எழுப்பினர்.