வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் தளி பேரூராட்சி நிர்வாகம் அழைப்பு உடுமலை, ஆக. 8- சுதந்திர தினத்தையொட்டி வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம் என தளி பேரூராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 73 வது சுதந்திர தினவிழா ஆக.15 (வியாழக்கிழமை) ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தளி பேருராட்சி பகுதியில் 730 மரக்கன்றுகளை ஒரே நாளில் நட பேருராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதேசமயம் பொது மக்களும் தங்கள் இல்லங்களில் மரக்கன்று நடுவ தற்கு முன்னேற்பாடாக குழிகள் அமைத்து நிர்வாகத் திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், ஆர்வம் உள்ளவர்கள் சுதந்திரதினத்தன்று பேருராட்சி அலுவலகத்தில் நேரில் சென்று மரக்கன்றுகள் பெற்றுக்கொள்ளலாம். ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 16 தேதிக்குள் மரம் வைக்க வாய்ப்புள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்தது ஒரு மரம் இருக்கின்ற நிலை உருவாகும். எனவே, அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர் மின் தடையால் சேவூரில் பொதுமக்கள் அவதி
அவிநாசி, ஆக. 8- அவிநாசி அருகே சேவூர் துணை மின் நிலையத் திற்கு உள்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடையால், பொதுமக்கள், தொழிற்துறையினர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவிநாசி வட்டம், சேவூர் துணை மின் நிலையத் தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் புதனன்று நடை பெற்றது. இதற்காக காலை 9 மணி முதல் தடை செய் யப்பட்ட மின் விநியோகம் வழக்கமா மாலை 5 மணி யளவில் விலக்கப்படும். ஆனால் இரவு 11 மணிவரை மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மேலும், வியாழனன்று பகல் 11 மணிக்கு அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்பட்டு மாலை 5.30 மணி வரை விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பனியன் நிறு வனத்தினர் உள்ளிட்ட தொழிற்துறையினர் மிகவும் பாதிப்பிற்குள்ளாகினர். இது குறித்து மின்சார வாரியத்தினரிடம் கேட்டபோது, அவிநாசி, சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மின் பராமரிப்புப் பணி தாமதமானது விரைவில் சீரமைக் கப்படும் எனத் தெரிவித்தனர்.