tamilnadu

img

திருப்பூர் : புதிய காவல் ஆணையர் நியமனம்

திருப்பூர், ஜூலை 1 - திருப்பூர் மாநகர் காவல் ஆணையராக வேலை செய்து வந்த சஞ்சய்குமார் தொழில்நுட்ப சேவை துறைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து திருப்பூர் மாநகரக் காவல் ஆணை யராக கோவை சரக டிஐஜி கார்த்திகேயன்  நியமிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், கோவை சரக டி.ஐ.ஜி., கார்த்திகேயன் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட காவல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.