திருப்பூர், அக். 7 – சிஐடியு தையல் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவரும், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினருமான தோழர் பி.குரு சாமி (வயது 66) புதனன்று காலமானார். தையல் கலைஞரான பி.குருசாமி மார்க்சிஸ்ட் கட்சி மீது தீவிர பற்றுக் கொண்டவர். தையல் கலைஞர்களை சங்க மாக அணிதிரட்டுவதில் முனைப்புடன் பணியாற்றினார். ஆத்துப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் உள்பட பொதுமக்களின் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான போராட்டத்தையும் தலைமை ஏற்று நடத்தியவர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன ளிக்காமல் புதன்கிழமை அவரது உயிர் பிரிந்தது.
அவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். கோவையில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, திருப்பூர் ஆத்துப்பாளையம் மார்க்சிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் முன்பாக தோழர் பி.குருசாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி கிளைச் செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கே.மாரப்பன், ஆர்.காளியப்பன், வாலிபர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் சந்தோஷ் இசைப் பிரியன், மாதர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் கீதா லட்சுமி ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன், அங்கேரிபாளையம் ஆர்.என்.ரத்தினசாமி உள்பட கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.